உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பத்துப் பேர் கைது

வவுனியா பாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 15இலட்சம் ரூபா பெறுமதியான நூறு வலைகளையும் மீட்டுள்ளதாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அதிகாரி யோ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 2மணியளவில் பாவற்குளம் பகுதியில் உளுக்குளம், சூடுவெந்தபிலவு பகுதிகளைச் சேர்ந்த 10பேர் சட்டவிரோதமாக தங்கூசி வலை, முக்கூட்டுவலை போன்ற சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களை சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்து நூறு வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 15இலட்சம் ரூபாவாகும். கைது செய்யப்பட்ட 10பேரும் தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 27.08.2019 அன்றைய தினம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இந்நடவடிக்கையில் மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினருடன் வவுனியா தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிஷாந்தன் தலைமையில் சென்ற அலுவலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க