உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பெண் ஒருவரின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை!

பெண் ஒருவரின் கையொன்றை அகற்றிய சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விசேட குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்கு செல்லவுள்ளது.

78 வயதான பெண்ணொருவரே இவ்வாறான சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.

குறித்த பெண் மாரவில வைத்தியசாலையில் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதே பெண்ணின் கை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க