உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று முதல் கொழும்பு குப்பைகளை அறுவைக்காடு நோக்கி அனுப்ப நடவடிக்கை!

வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளன.

இதனடிப்படையில் புத்தளம், அறுவைக்காடு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில் இன்று முதல் கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகளை திரட்டி குறித்த பிரதேசத்துக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த குப்பைகளை ஒரே நாளில் சுத்திகரிக்க முடியாது என்றும் கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது

கருத்து தெரிவிக்க