உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் தொடரும் அனர்த்தம்!

வவுனியாவில் கடும் காற்று மற்றும் மழையினால் மக்கள் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால் 8 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள வீடுகளிலும் பொதுநோக்கு மண்டங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காற்றினால் சேதமடைந்த விடுகளில் இருந்து பொருட்கள் அனைத்தும் நேற்று இரவு பெய்த கடும் மழையினால் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

வவுனியா செட்டிகுளம் வவுனியா வடக்கு நெடுங்கேணி மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரப்பெரியகுளம் ஆகிய இடங்களிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க