உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார்-மதவாச்சியில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் ஒரு தொகுதி கேரள கஞ்சாவு பொதிகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனம் ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட நிலையில் 6 பொதிகளைக் கொண்ட சுமார் 8 கிலோ 6 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா பொதிகளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கஞ்சா கடத்த பயண்படுத்தப்பட்ட வாகனமும் மடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை மடு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க