உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சஜித்துக்கு ‘ராஜயோகம்’ – ஜோதிடர்கள் ஆரூடம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ராஜயோகம் இருப்பதாக ஜோதிடர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளதால் புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியும் இழுபறி நிலையில் இருந்துவருகின்றது.

இந்நிலையில் ஐ.தே.கவுக்குள்  ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் களமிறங்கியுள்ளனர்.ரணில் மற்றும் சஜித் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடிவருகின்றனர்.

இவ்வாறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சஜித்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் அவரின் சகாக்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பிரதான நகரங்களில் சஜித்துக்கு ஆதரவாக ‘போஸ்டர்கள்’ ஒட்டப்பட்டுள்ளன.  ‘ சஜித்தே நாட்டுக்கு தேவை, ‘அவரே அடுத்த ஜனாதிபதி’, ‘ சஜித்துடன் புதிய இலங்கையை நோக்கி’ என்றெல்லாம் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

மறுபுறத்தில் சஜித்துக்கான நேர, காலம் எப்படி அமைந்துள்ளது என்பது தொடர்பில் பிரபலமான ஜோதிடர்கள் மூலம், சஜித்துக்கு நெருக்கமான சிலர் ஜோதிடம் பார்த்து வருகின்றனர் என்றும், அதில் சஜித்துக்கு ராஜயோகம் இருப்பதாக ஆரூடம் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெறுவதற்கு ஏதுவான வகையிலேயே அவரின் கிரக கட்டமைப்பு அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க