உள்நாட்டு செய்திகள்புதியவை

கவனயீனத்தால் பிரிந்த குழந்தையின் உயிர்

ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தை இன்று காலை நிந்தவூர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை நிந்தவூர் 9ஆம், பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் , பாத்திமா நிஸா தம்பதிகளின் குழந்தை என தெரியவந்துள்ளது.

குழந்தையை அவரது தாத்தா உறவு முறையுடையவர் அழைத்து சென்ற நிலையில் கவனயீனம் காரணமாக குழந்தை கடலில் அடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடபப்டுகிறது.

கருத்து தெரிவிக்க