உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகவியலாளர் மகாநாடு’

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் உதவிப்பணிப்பாளர் யு.எல்.ஏ.மஜீத் தலைமையில் இடம் பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறித்த ஊடகவியலாளர் மகாநாடு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ,மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சகல விதமான வேலைத்திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்ட 167 இளைஞர் கழகங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள்,உற்பட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து விடையங்கள் தொடர்பாகவும் ஊகடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா,இளைஞர் சேவை அதிகாரி ஏ.டியூக் குரூஸ் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க