உள்நாட்டு செய்திகள்புதியவை

11 பேர் உயிரிழப்பு: காவல் அதிகாரிக்கு இடமாற்றம்

சட்டவிரோத மது உற்பத்தியாளர்களுக்கு எதிராக செயல்படத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் பல்லேவெல காவல் நிலைய பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) களுத்துறை (தெற்கு) காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மது உட்கொண்டதன் விளைவாக கடந்த வாரம் 11 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து,பொறுப்பதிகாரி கமல் ரத்நாயக்காவின் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்ட காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர, குறித்த நபர்களின் உயிரிழப்பு குறித்து கம்பஹா குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க