உள்நாட்டு செய்திகள்புதியவை

காடுகளின் அழிவை சீராக்க புதிய திட்டம்

அரசுக்கும் வனப்பாதுகாப்பு அதிகார சபைக்கும் சொந்தமான 95 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய காடுகளை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் இருந்த மொத்த வனங்களில் கடந்த ஒரு தசாப்தத்தில் ஏற்பட்டுள்ள அழிவு நிலையை சீராக்கும் நோக்கில் மேற்படி திடம் முன்னெடுக்கப்பட உள்ளது.

குறித்த திட்டத்தின் படி ஒரு ஏக்கர் நிலப்பரப்பை காடாக மாற்றியமைப்பதற்கு 4 இலட்சம் ரூபா நிதி தேவைப்படுவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னம்பெரும இன்று தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க