உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

பதவி நீக்கப்பட்டார் சந்திக ஹதுருசிங்க!

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க இன்று (திங்கட்கிழமை) பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திக ஹதுருசிங்கவினை பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுமாறு கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்திருப்பதாக ஏலவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் இன்று பதவி விலகியுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.

ஹதுருசிங்கவிற்கு மேலும் 16 மாதங்கள் பதவி காலம்  உள்ள போதும் அவர் பதவி விலக கேட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டியில் இலங்கையணி பிரகாசிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க