உள்நாட்டு செய்திகள்புதியவை

சஹ்ரானுடன் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் அம்பாறையில் கைது

தடைசெய்யப்பட்ட ஜமாத் மில்லத் இப்ராஹிம் (ஜேஎம்ஐ) குழுவைச் சேர்ந்த 3 பேர் இன்று (ஆக. 5) அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் குறித்த சந்தேக நபர்களுக்கு ஆயுத பயிற்சி வழ ங்கப்பட்டுள்ளதாக காவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் எம்.எம். சைபுல்லா ஹக் அல்லது ‘அபு சாஹித்’, எம்.ஏ.அம்ஹர் அல்லது ‘அபு ஹிந்த்’ மற்றும் எம்.டி.ஹிதயதுல்லா அல்லது ‘அபு துரப்’.என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளம்பாறை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க