உள்நாட்டு செய்திகள்புதியவை

‘முத்துராஜவலை அழிவுக்கு சில அமைச்சர்களே காரணம் ‘

முத்துராஜவலையில் நடைபெற்று வரும் அழிவுகளுக்கு சில அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இது கம்பஹா மாவட்டன் ஒரு பெறுமதியான பொக்கிஷம் என்றும் அவர் கூறினார்.

கம்பஹாவில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்

நாட்டின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக பாரிய சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய திட்டத்தின் கம்பஹா மாவட்டத்திற்கான நிறைவு நாள் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் திவுலப்பிட்டிய பொது மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க