உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி, சஜித் இணைய வாய்ப்பில்லை: சு.க உறுதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது சஜித் பிரேமதாஸவை பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார்.

இதன் காரணமாகவே இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன.

எவ்வாறெனினும்  ஐக்கிய தேசிய கட்சியுடனோ அல்லாது சஜித்துடனோ  சுதந்திர கட்சி மீண்டும் இணைய வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க