உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கம்பஹா மாவட்டத்திற்கான நிறைவு நாள் நிகழ்வு இன்று

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய திட்டத்தின் கம்பஹா மாவட்டத்திற்கான நிறைவு நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் திவுலப்பிட்டிய பொது மைதானத்தில் இடம்பெற்றது.

சட்டவிரோத போதை பொருள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை ஒருசிலர் இதுவரை புரிந்து கொள்ளவில்லையென இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் கம்பஹா மாவட்ட செயல்த்திட்டம் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமானது.

மாவட்டத்தின் 13 கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடந்த 8 நாட்களாக இடம்பெற்ற இத்தி;ட்டத்தின் மூலம் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் நன்மையடைந்தனர்.

இத்திட்டத்திற்கு சமாந்திரமாக மாவட்ட மக்களின் தயாரிப்புக்கள் அடங்கிய கண்காட்சியொன்றும் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க