உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்றுடன் ஒரு மாதம் நிறைவு ; 7 ஆயிரத்து 144 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த மாதம் 5 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய தினத்துடன் அதனை நிறைவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சுற்றிவளைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 7 ஆயிரத்து 144 சாரதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

வாகன விபத்துக்களை குறைக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கான காலத்தை நீடிக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க