உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக படகு சேவைகள்

கொழும்பு நீர்வழி பயணிகள் போக்குவரத்து படகு சேவையினை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரவாவியிலிருந்து வெள்ளவத்தை கால்வாயை மையப்படுத்தி இதன் முதற்கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு 40 நிமிடங்களில் பயணிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

குளிரூட்டப்பட்ட படகுகள் இதற்கென பயன்படுத்தப்படுமென மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்ட பணிப்பாளர் தனுஷ்க்க ராமநாயக்க தெரிவித்தார்.

இதன் ஊடாக போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படவுள்ளதோடு மக்களின் போக்குவரத்து செலவீனங்களும் குறைக்கப்படுமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2 ம் கட்டமாக களனி கங்கையில் மட்டக்குழியிலிருந்து ஹங்வெல்ல வரை படகு சேவை முன்னெடுக்கப்படுமென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க