உள்நாட்டு செய்திகள்புதியவை

38 ஆண்டுகளுக்குப் பின் உயர்தர பரீட்சையில் தோற்றும் அமைச்சர் ரஞ்சன்

1981 ஆம் ஆண்டில் தனது கல்வி பொது தராதர உயர்தர தேர்வுகளுக்கு முதன்முதலில் தோற்றிய அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,  38 ஆண்டுகளுக்குப் பிறகு 2 வது முறையாக இன்று (ஓகஸ்ட் 5) உயர்தர தேர்வில் தோற்றுகிறார்.

பரீட்சைகளை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்ட  அமைச்சர் ரஞ்சன், தனது கல்வி வகுப்புகளுக்காக தனியார் ஆசிரியர்களை வீட்டில் பணியமர்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது முதல் உயர்தர பரீட்சை தேர்வின் போது  ஒரு பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க