உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தென் மாகாண ஆளுநரும் இராஜினாமா !

மாகாண ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்படும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனடிப்படையில் தற்போதைய ஆளுநர் பதவி விலகிய நிலையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையாவார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது பதவி விலகலை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து நேற்று ஜனாதிபதி செயலகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய மாகாண ஆளுநர் குணவர்தன தனது பதவியை விட்டு விலகினார்.

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் விரைவில் இந்த மாகாண ஆளுநர்கள் அனைவருமே தமது பதவிகளை விலகுவார்கள் என்றும் அதற்கு பதிலாக புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த பதவி விலகல் மற்றும் புதிய ஆளுநர்கள் நியமனங்களுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை..

கருத்து தெரிவிக்க