உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சுதந்திரபுரம் பாடசாலையில் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அதனைத் தொடர்ந்து விளையாட்டு மைதான திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு கா.பொ.தா த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மூன்று மாணவர்களுடைய கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டிஜயா புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முப்புர வட்டார உறுப்பினர் குகனேசன் சுதந்திரபுரம் கிராம அலுவலர் மு .வருண்ஜீவ் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க