உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஜனாதிபதி வேட்பாளராக கோத்தா அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி’

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டால் அவரை விடவும் தானே அதிகம் சந்தோசப்படுவதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது ஐ.தே.கவின் புதிய கூட்டணி தொடர்பில் கேள்வி எழுப்பிய போது 2015 ஆம் ஆண்டு காணப்பட்ட கூட்டமைப்பை விடவும் குறைவான எண்ணிக்கையுடைய அங்கத்தவர்களை உடைய கூட்டமைப்பாகவே அது காணப்படும் என பதிலளித்துள்ளார்.

இதேவேளை அக்சா, சோபா போன்ற உடன்பாடுகளில் கையெழுத்திடுவது நன்மை பயக்கும் என தன நினைக்கவில்லை என்றும், இதனை மக்களை தீர்மானிக்க விடுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி மொட்டு அணியின் ஜனாதிபதி வேதாளர் அறிவிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க