உள்நாட்டு செய்திகள்புதியவை

மிஹிந்தலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

மிஹிந்தலை குருந்தல்கமை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் அவரது வீட்டிற்கு அருகில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுப்பட்டிருந்த நபர் ஒருவருக்குமிடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட மோதலின் பொது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவிக்கின்றது.

உயிரிழந்தவர் குருந்தல்கமை போதிராஜபுர பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர் குறித்த இடத்திலிருந்து தப்பிசென்றதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க