உள்நாட்டு செய்திகள்புதியவை

‘மருந்து தட்டுப்பாட்டு குற்றச்சாட்டில் உண்மை இல்லை’

மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து வகைகள் என்பன பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர் டொக்டர் ஏ.ரி.சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

மஹரகம அபேக்சா வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் இந்த வைத்தியசாலைகளில் எந்த மருந்து தட்டுப்பாடுகளும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க