உள்நாட்டு செய்திகள்புதியவை

‘விமான தரிப்பு கட்டண குறைப்பினால் இலங்கைக்கு பாதகம்’

இலங்கை விமானசேவையில் சர்வதேச விமானங்களை தரித்து வைத்திருப்பதற்கான கட்டணத்தில் நூற்றுக்கு 25 வீத குறைப்பை மேற்கொள்ள அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தால் மாதத்திற்கு 175 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது

இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபத்திரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமானங்களை தரித்து வைத்திருப்பதற்கான கட்டணத்தில் 25 வீத குறைப்பை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவையில் அதிக வருமான மீட்டும் பிரதான பிரிவாக இந்த பிரிவு காணப்படுகின்றது.

இதன் மூலம் வருடத்திற்கு 100 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப் பெறுகிறது.

இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமையின் மூலம் விமான சேவையை வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கை என்பது தெளிவாகிறது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகைதரும் விமானசேவை மந்தமடைந்துள்ளதாக அரசாங்கம் பொய் கூறிக் கொண்டிருக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க