உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘வேட்பாளர் தெரிவின் பின்னரே கூட்டணி அமைக்க வேண்டும்’

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் பலமான கூட்டணியொன்று உருவாக்கப்படும் எனவும் அதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவாக இருக்க வேண்டும் அவரைத் தவிர கட்சிக்குள் வேறு எவரும் இருப்பின் ஏக மனதாக தெரிவு செய்யப்படும்  வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உத்தேசிக்கப்பட்ட கூட்டணியின் யாப்புக்கான இன்னும் அனுமதி எதுவும் வழங்கப்பட வில்லை.

கூட்டணியின் பொது செயலாளர் பதவி ஐக்கிய தேசிய கட்சயின் உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் ஒரு கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நேற்று கூடிய போது புதிய கூட்டணி தொடர்பில் கைச்சாத்திடல் மற்றும் கூட்டணியின் யாப்பு தொடரபிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

எனினும் கூட்டணியின் யாப்பு தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க