உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலய பொன்விழா

கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.20மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி ரவீந்திரநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இரண்டு நாள் கொண்டாட்டத்தின் முதலநாளான இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

வரவேற்பு வளைவு ,சரஸ்வதி சிலை, பொன்விழா தூபி ,உள்ளக அழகுபடுத்தல், சிற்றுண்டிசாலை, கண்காணிப்பு கமெரா, திறன் வகுப்பறை, கொடிக்கம்பம், பெண்கள் மலசலகூடம், குழாய் கிணறு, துவிச்சக்கரவண்டி தரிப்பிடம், முதல்வர்கள் பெயர் பலகை, வீதியோர நடைபாதை, மற்றும் கிணறு, மைதான அரங்கு ஆகியனவே கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இரண்டாம் நாளான நாளை சனிக்கிழமை பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க