உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஒமந்தையில் விபத்து: சிறுவன் படுகாயம்

வவுனியா ஒமந்தையில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் விபத்தில் 14 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக ஒமந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து ஒமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் இன்று மாலை ஒமந்தை மாணிக்கவளவு பகுதியில் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சைக்கிளில் சென்ற இந்திரகுமார் திவாகர் (வயது 14) என்ற சிறுவன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க