உள்நாட்டு செய்திகள்புதியவை

போலி இலக்கத் தகடுகளுடன் சென்றவர்கள் யாழில் கைது

மோட்டார் சைக்கிளில் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திப் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்றது என காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் மோட்டார் சைக்கிள் வந்தவர்களில் ஒருவர் முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்து பயணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை அழைத்து செல்வதற்காக வந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவரை அழைத்து செல்வதற்காக குறித்த இருவரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்துக்குரிய வகையில் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க