உள்நாட்டு செய்திகள்புதியவை

மாலைதீவு தூதுவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமூக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை மாலைதீவில் நிறுவுவது குறித்தும் நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வாவும் கலந்துகொண்டார்.

கருத்து தெரிவிக்க