உள்நாட்டு செய்திகள்புதியவை

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணி பகிஷ்கரிப்பு

சிலாபம் – குருநாகல் வீதியில் இயங்கும் தனியார் பேருந்துகள் அதன் பாதையில் இரண்டு புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டதாக தெரிவித்து , இன்று பிற்பகல் பணி பகிஷ்கரிப்பை தொடங்கியுள்ளன.

பிங்கிரிய – குருநாகல் வீதியில் மேற்படி புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளது.

வடமேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மீறி குறித்த பேருந்து சேவைகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பனி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இப்பகுதியில் 51 பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மேலும் இந்த வழியில் புதிய பேருந்துகள் சேர்க்கப்படுவதைத் தடுக்க ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் பயணிகளுக்காகவே மேற்படி சேவை இணைக்கப்பட்டுள்ளது என சிலாபம் பஸ் டிப்போ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க