உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

உடற்கட்டழகர் ராஜகுமாருக்கு இ.தொ.கா கெளரவம்

ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்ற மாதவன் ராஜகுமார் என்பவரை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியை இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழங்கி வைத்தார்.

மலையகத்தில் லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் குறித்த இளைஞருக்கு இன்று 02.08.2019 கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் மேற்படி கெளரவம் அளிக்கப்பட்டது.

இலங்கை – இந்திய சமுதாய பேரவையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இணைந்து இந்த அன்பளிப்பினை வழங்கியுள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் டுபாய் நாட்டில் நடைபெறவுள்ள உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவுள்ள இவருக்கு விமான பயணசீட்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க