உள்நாட்டு செய்திகள்புதியவை

14 மில்லியன் பெறுமதியான தங்கத்தை கடத்தியோர் கைது

ரூ .14 மில்லியன்பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற 6 இந்தியர்கள் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சென்னைக்கு விமானத்தில் ஏற முயன்றபோது இரண்டு கிலோகிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டனர்.

இவற்றில் கிட்டத்தட்ட ஒரு கிலோ நகைகள் அவர்களின் உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பிரிவில் இணைக்கப்பட்ட அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க