உள்நாட்டு செய்திகள்புதியவை

1859 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

அடுநுவர, மணிக்காவ பகுதியில் 1859 கிலோ கழிவுத் தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கடுகண்ணாவையில் இருந்து வெலம்போட நோக்கி கழிவுத் தேயிலையுடன் சென்று கொண்டிருந்த வாகனம் சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது.

இதன் போது குறித்த தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இலங்கை தேயிலை சபையின் அறிக்கையைப் பெற்ற பின்னர் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கருத்து தெரிவிக்க