உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாதியுடன் தொடர்பு பேணிய இருவர் கைது

உயிர்த்த ஞாயறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை பிபிலை காவல்துறை கைது செய்துள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் மொஹமட் சஹ்ரானுடன் ஹம்பாந்தோட்டையில் பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிர்த்த ஞாயறு தாக்குதலின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய பலவேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க