உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பிரதமர் தமது பதவியை பிறருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்’

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெறும் யுத்தம் விரைவில் வெளிப்படும் என மொட்டு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் பிறருக்கு விட்டுக் கொடுக்கமாட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்தவுடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெறுகின்ற பனிபோர் வெளிப்படும்.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மொட்டு அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை எதிர்வரும் 11ஆம் திகதி ஷ உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க