உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பரீட்சை தாள் திருத்தும் மையங்கள் செப் 16 இல் திறக்கப்படும்’

உயர்தர பரீட்சை தாள்கள் திருத்தும் பணிக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக செப்டம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

498 மையங்களில் இணைக்கப்பட்டுள்ள 8466 ஆசிரியர்களால் உயர்தர பரிட்சைத் தாள்கள் திருத்தப்படும்.

ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை முதல் கட்டமாக மூன்று பிரிவாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கிடையில், தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைத் தாள்களின் திருத்த பணிகள் ஓகஸ்ட் 15 முதல் 20 வரை 39 பாடசாலைகளில் நடைபெறும்.

இந்த பாடசாலைகள் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கருத்து தெரிவிக்க