உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் 159 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக பட்டப்படிப்பை முடித்தும் வேலைவாய்ப்பின்றி இருந்த 159 பட்டதாரிகளுக்கு இன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த 40 பட்டதாரிகளுக்கு அன்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் 159 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக வவுனியாவைச் செர்ந்த 199 வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம் கனீபா மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதுர்தீன், பிரதேச செயலாளர் கா.உதயராசா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க