உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

“தெரிவுக் குழு எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் கூடவுள்ளது’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழு எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக இருந்த சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் சாட்சி வழங்க அழைக்கப்படடுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவும் சாட்சிவழங்க அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவுக்குழு நேற்று அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க