உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நானே கொலை செய்தேன்’: சந்தேகநபர் ஒப்புதல்

கிளிநொச்சிஇ இடம்பெற்ற இரட்டை கொலை சந்தேக நபருக்கு 07நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30ம் திகதி கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியது.

கொலை சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நமரை விசாரணை மேற்கொண்டபோது கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

;குறித்த வீட்டாருடன் தனக்கும் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டதாகவும் அதனால் அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று அதிகாலை ஒன்று முப்பது மணியளவில் அவர்களின் வீட்டுக்குள் புகுந்து கம்பி ஒன்றினால் வீட்டு இளைஞனை தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் காவல்துறைக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி காவல் நிலைய குற்றவியல் பிரிவு சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை சோதனை செய்த பொழுது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றும் நேற்று மீட்கப்படுள்ளது.

சந்தேக நபரை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் முப்படுத்தினர். இந்நிலையில் அவருக்கு 07 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரிவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க