உள்நாட்டு செய்திகள்புதியவை

அனுராதபுரத்தில் துப்பாக்கிச்சூடு: இராணுவ அதிகாரி உயிரிழப்பு

அனுராதபுரத்தில் இன்று (ஜூலை 31) தன்னை தானே சுட்டுக்கொண்ட  இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பிற்பகல் 3:55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் இராணுவத்தின் 212 படையணியுடன் இணைந்த 24 வயது ராணுவ அதிகாரி டி.பிரியாந்த ஏகநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது அனுராதபுர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க