உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

போபத்தலாவையில் விபத்து :ஒருவர் உயிரிழப்பு

ஊந்துருளி தடம் புரண்டதில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள போபத்தலாவ மெனிக்பாலம் மரக்கறி பண்னையில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரபத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) இடம் பெற்றுள்ளது. 35வயதுடைய எஸ்.பொடிமாத்தியா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பண்னையில் இருந்து 03ம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றி சென்ற போது குறித்த ஊந்துருளி பாதையை விட்டு விலகி தடம் புரண்டத்தில் சாரதியும் அதன் சேவையாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மேற்படி சேவையாளர் உயிரிழந்துள்ளதாகவும் பலத்தகாயங்களுக்குள்ளான ஊந்துருளியின் சாரதி அக்கரபத்தனை வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரின் சடலம் அக்கரபத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரா தகவல் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரபத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க