உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவிலுள்ள கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்!

உலகலளாவிய ரீதியில் வாழும் இந்துக்களினால் அடி அமாவாசை விரதம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வவுனியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

குறிப்பாக வவுனியா அகிலாண்டேஸ்வரி சமதே அகிலாண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் வவுனியா கந்தசுவாமி ஆலயங்களில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

மேலும் ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்ளும் பக்தர்களினால் தங்களது பித்துருக்களுக்கான வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அந்தனர்களிற்கு தானமும் வழங்கியிருந்தனர்.

இதேவேளை ஆடி அமாவாசை விரதம் அனுஸ்டிப்பவர்கள் வவுனியாவில் உள்ள ஏனைய கோயில்களிலும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க