உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி புதிய அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது.

கூட்டணியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

மேலும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க