உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மத்தேகொட துப்பாக்கி சூடு; சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழப்பு!

மத்தேகொட பிரதேசத்தில் துப்பாக்கியினை காட்டி அச்சுறுத்தி சிற்றூந்து ஒன்றை கடத்தி சென்ற இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பிங்வத்த பிரதேசத்தில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், மற்றுமொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க