உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

திம்புல்ல தமிழ் பாடசாலையில் ; புலமைப்பரிசில் வழிகாட்டல் செயலமர்வு!

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் செயலமர்வு திம்புல்ல தமிழ் மஹா வித்தியாலயத்தில் 1995 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் அணுசரணையோடு பாடசாலையின் அதிபர் அவர்களின் தலைமையில் கடந்த 28.07.2019 அன்று இடம்பெற்றது.

சுமார் 163 மாணவர்கள் இப் பயிற்சி பட்டறையில் கலந்து பயன்பெற்றனர்.

வழிகாட்டுனர்களாக எமது பாடசாலையின் ஆசிரியரும் ஆரம்பப்பிரிவு வளவாளருமாகிய திரு.பெரியண்ணன் அவர்களும் மவுண்ட்வேர்ணன் வித்தியாலய ஆசிரியை செல்வி. மதுமதி அவர்களும் சிறப்பித்தனர்.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.தனபாலன் ஐயா அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு ஆசிகளை வழங்கினார்.

கலந்துக்கொண்ட அயற் பாடசாலைகளின் மாணவர்களுக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

இந் நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த பாடசாலை சமூகத்திற்கும் உளமார்ந்த நன்றிகள்.

கல்விக்கு கரம் கொடுத்த 95ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் தொகுதியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கருத்து தெரிவிக்க