உள்நாட்டு செய்திகள்புதியவை

அரச பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை அறிவிப்பு

தேசிய மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாவது தவணை விடுமுறை ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சு தமது அறிக்கையில் இன்று இதனை (ஜூலை 29) அறிவித்துள்ளது.

இதேவேளை மூன்றாவது தவணை செப்டம்பர் 02 ஆம் திகதி (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலினால் பாடசாலைகளின் இரண்டாவது தவணைக்கான கல்வி அமர்வுகள் திட்டமிடப்பட்ட திகதியை விட மிகவும் தாமதமாக தொடங்கியது.

ஏப்ரல் 22 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவிருந்த நிலையில் மே மாதமே திறக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க