உள்நாட்டு செய்திகள்புதியவை

காலியில் சேதமடைந்த கப்பலை அகற்ற நடவடிக்கை

காலி றூமஸ்ஸல்ல என்ற பிரதேசத்தில் சமீபத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான கப்பலை பாகங்களாக பிரித்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் தர்ணி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலை  அகற்றுவதற்கு இந்த நடைமுறை ஒன்றே சாத்தியமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கப்பலை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன் இந்த கடல் பிரதேசங்களில் நிலவும் இயற்கை தன்மையினால் கப்பலை அகற்ற முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை அகற்ற திட்டமிட்ட நடவடிக்கையினை மேற்கொள்வது அவசியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க