உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெளிநாடுகளுக்கான இந்திய நிதி ஒதுக்கீட்டில் இலங்கைக்கு வஞ்சகம்!

இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து இலங்கை வருத்தமடைந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இலங்கை விளங்குவதுடன், நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது.

எனினும், மொறிசியஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கே இந்த ஆண்டில் இந்தியா அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 250 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மொறிசியசுக்கான நிதி ஒதுக்கீடு, 350 கோடி ரூபாவில் இருந்து, 1100 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் உதவி பெறும் நாடுகளில் பூட்டானை அடுத்து மொறிசியசுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு அடுத்ததாக, மாலைதீவு நான்காவது அதிகளவு நிதியைப் பெறுகிறது.

இலங்கைக்கு ஒதுக்கியுள்ள உதவித் தொகையை இந்தியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க