உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

பார்வையாளர் கூடத்தில் மயங்கி விழுந்த அவிஷ்கவின் தந்தை!

இலங்கையின் கிரிக்கட் வீரர் அவிஷ்க பெர்ணாண்டோவின் தந்தை நேற்று இடம்பெற்ற இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்ணாண்டோ ஆட்டமிழந்த போது அவருடைய தந்தை மயங்கி விழுந்த சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது.

உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரின் உடல் நிலை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவிஷ்க பெர்ணாண்டோ 77 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்த போதே அவருடைய தந்தை மயங்கி விழுந்திருக்கிறார். எனினும் இந்த தகவல் தமக்கு உடனடியாக தெரியவில்லை என்றும் தாம் ஆட்டமிழந்த பின்னர் ஓய்வறைக்கு வந்தபோதே தெரியும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க