உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தொடரூந்து சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

இலங்கையின் தொடரூந்து சேவை தொடர்பில் நேற்று ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதன்படி இந்த தொடரூந்து சேவை அத்தியாவசிய தேவை என்ற அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த அறிவித்தலின்படி இலங்கையின் தொடரூந்து சேவை பொதுச்சேவை என்ற அடிப்படையில் பயணிகள் அல்லது பொருட்களையோ சேவைகளையோ இந்த திணைக்களம் உரிய வகையில் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், அதன் பரிமாணங்கள், அதன் ஒழுங்கு விதிகள், பராமரிப்பு விதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமிஞ்சைகள் அதன் அனுமதிச்சீட்டுக்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் அத்துடன் ஏனைய விநியோக நடவடிக்கைகள் அனைத்தும் இந்த திட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் ஆக அறிமுகப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி தமது இந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்திருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க